
யாழ்ப்பாணம், ஒக். 18: கடலட்டைப் பண்ணைகளினால் கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை என்று நக்டா பணிப்பாளர் நிருபராஜ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “பாரம்பரிய மீன்பிடி முறை ஊடான வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இந்த கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படவுள்ளன. கடலோர பகுதி மக்களுக்கு நிரந்தரமான வருமானத்தை பெற்றுக் கொடுப்பது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவாகும். அதன் ஒரு வடிவமே கடலட்டை பண்ணைகள் என்றார் அவர்.
இது தொடர்பான வீடியோ இணைப்பு கீழே.