மன்னாரில் மண்ணெண்ணெய் 700 ரூபாய் – அதிர்ச்சியில் மக்கள்

இன்றைய சபை அமர்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன்:

நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராகிவிட்டது என்று கூறுகிறார்கள்.ஆனால் இப்போதும் எரிபொருள் விநியோகத்தில் பல ஊழல்கள் நடைபெறுகின்றன.மன்னாரில் கடல் தொழிலை நம்பி பலர் வாழ்கின்றனர்.கடல் தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தில் குளறுபடி காணப்படுகிறது.

அரசின் அறிவிப்பின் படி சுமார் 350 ரூபா வீதம் எண்ணெய் வழங்கப்பட்டாலும்,வெளியில் 700 ரூபாய்க்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு மண்ணெண்ணெய் விற்பவர்களுக்கு எங்கிருந்து மண்ணெண்ணெய் கிடைத்தது.இது தொடர்பில் மாவட்ட அரச அதிபரின் செயற்பாடு போதாது.ஆகவே மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் சீராகவும்,மானிய விலையிலும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *