வடக்கு மாகாணத்துக்குள் நுழையும் தடை செய்யப்பட்ட கடலட்டைத் தொழில்நுட்பம் – கொந்தளிக்கும் மீனவர்கள்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடலட்டைத் தொழில்நுட்பம் வடக்கில் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னரசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

எமது வடக்கு பிரதேசத்தில் முதலீடு செய்வதாக கூறி,இந்தியாவில் தடை செய்யப்பட்ட தொழில் நுட்பத்தினை கொண்டு வருவதனை வடக்கு மீனவ தொழிலார்கள் விரும்பவில்லை .அத்துடன் இந்த செய்தியினால் நாம் மிகவும் கவலையடைகிறோம் .இதனால் வடக்கு பிரதேச மீனவர்களில் வாழ்வாதாரம் பாதிப்படையும்.எனவே இதனை இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் மற்றும் இந்திய அரசாங்கம் ஆகியன கவனத்தில் எடுக்க வேண்டும்.

நேற்றைய தினம் இரவு நெடுந்தீவு,அனலைத்தீவு அண்மித்த பிரதேசங்களில் 75 இலிருந்து 100க்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் வருகை தந்துள்ளன.இவை அனைத்து படக்குகளும் இராமேஷ்வரத்தைச் சேர்ந்தவையாகும்.

எமது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் உட்பட்டிருக்கும் இந்த வேளையில் நேற்றைய தினம் நூற்றுக்கு மேற்பட்ட இழுவைப்படகுகள் வருகை தந்து எங்களுடைய கடற்தொழிலை சட்டவிரோதமாக செய்துவிட்டு சென்றிருக்கின்றார்கள்.இந்தப் படகுகளை இந்திய அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

தயவு செய்து இலங்கை கடற்படையாக இருந்தாலும் சரி, இந்திய துணைத்தூதரகமாக இருந்தாலும் சரி ,வடக்கு கடற்பகுதிகளுக்குள் சட்டவிரோத தொழிலையையும் இந்திய மீனவர்களை நிறுத்தவேண்டும்.

அதேபோல் தீவக பகுதிகளுக்கு இந்திய படகுகள் வருவதால் ,தீவக வளங்களும் அழிக்கப்பட்டு மீனவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகின்றனர்.

யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் இதனை முற்று முழுதாக தடுத்து நிறுத்துமாறும் யாழ்.கடற்தொழிற்சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோல் இந்தியாவில் கடலட்டை தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் கடந்த வாரம் மன்னார் ஓலைத்தடுவாயில் அமைந்துள்ள கடலட்டை உற்பத்தி நிலையத்திற்கு இந்திய முதலீடடாளர் வருகை தந்து அந்த தொழில்நுட்பத்தை முதலீடு செய்ய இருப்பதாக அறியும் செய்தி எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.இதனை வடக்கு கடற்தொழிலாளர்கள் விரும்பவில்லை.

வடக்கில் இந்த கடலட்டை தொழிநுட்பத்தை கொண்டு வந்து வடக்கு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டினை இந்திய அரசாங்கம் செய்யக்கூடாது என்ற செய்தியை இந்திய அரசாங்கத்துக்கு சொல்லவதோடு, யாழ் மாவட்டத்தில் இந்த கடலட்டை தொடர்பான பிரச்சனை நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக நடந்துகொண்டிருக்கிறது என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *