
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , கருக்காமுனை களப்புக் கடலில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஈச்சிலம்பற்று – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நாகராசா தேவராசா ( வயது 51) என இனங்காணப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இன்று காலை கருக்காமுனை களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வேளையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்று இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பிறசெய்திகள்