யாழ்.பல்கலைக்கழகமும் கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். அங்குரார்ப்பண நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சந்திப்பினை தொடர்ந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களை இணைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் அங்குரார்ப்பணம் இன்று நடைபெற்றுள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களில் உள்ள வளாகங்களையும் இணைந்து இந்த சங்கத்தினை வலுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இன்றைய கூட்டத்தின் அடிப்படையில் வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் தலைவர் நி.தர்சன் தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமாரும் பொருளாளராக யாழ் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த பிரதீபனும் ஊடக பேச்சாளராக யாழ் பல்கலைக்கத்தினை சேர்ந்த இராசரெத்தினம் தர்சனும் செயற்பாட்டு உறுப்பினராக கிழக்கு பல்கலைக்கழக மாணவி அனுஸ்திகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
பிறசெய்திகள்