கரையோர கட்டுப்பாடுகள் இந்தியாவிற்கு மிக முக்கியம்- பாதுகாப்பு அமைச்சர்!

கடந்த சனிக்கிழமை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆசிய கரையோர காவல் அமைப்புகளுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது இந்தியாவிற்கு கரையோர சர்வதேச சட்டங்கள் மிகவும் முக்கியம் எனவும் இந்தியா அதன் எல்லைகளை பாதுகாப்பதோடு கரையோர ஒழுங்குகளை மதித்து அவற்றைப் பின்பற்றுவதிலும் முழுமையாக பங்களிப்பு செய்யும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடும் போது, “நாங்கள் சுதந்திரமான இந்து பசுபிக் பிராந்தியத்தையே எப்போதும் வலியுறுத்துகிறோம். எந்த ஒரு நாடும் சுதந்திரமாக கடற்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏனைய நாடுகளை அப்புறப்படுத்தி தான் ஏகபோக உரிமையை கொண்டாட முடியாது என்பதில் திடமாக உள்ளோம்.” என கூறியுள்ளார்.

அத்தோடு இந்த சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இந்தியா எப்போதும் தயாராக இருக்கிறது என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.

சமீப காலத்தில் இந்து பசுபிக் பிராந்தியத்தில் சீனா பிற நாடுகளின் உரிமைகளை மறுத்து வரும் நிலையில் இந்த கருத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியா இதுவரை காலமும் எந்த ஒரு நாட்டின் கடல் எல்லையையும் சுரண்டுவதற்கு முற்பட்டது இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *