யாழ். ஆவரங்காலில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம்,ஒக் 18

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆவரங்கால் கிழக்கு, புத்தூரை சேர்ந்த 43 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரையும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை மாத்திரைகளையும் மேலதிக நடவடிக்கைக்காக புலனாய்வு பிரிவினர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *