யாழில் பொலிஸ் நிலையத்தின் மலசலகூடத்தின் வழியாக தப்பிச்சென்ற கைதி! சட்டத்தரணி ஊடாக சரண்!

போதைப்பொருள் வழக்கில் கைதான சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தின் மலசலகூடத்தின் வழியாக தப்பிச்சென்று சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவர் கடந்த வியாழக்கிழமை வழிப்பறி, கொள்ளை, போதை வியாபாரம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் அந்நபர் கைதாகியுள்ளார்.

இந்நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தின் மலசலகூடம் வழியாக தப்பி ஓடிய நபர் மற்றொரு தேடப்படும் நபருடன் இணைந்து சரணடைந்துள்ளார்.

இதேவேளை குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவத்தை தொடர்ந்து இரு பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *