கூட்டணிக்குள் குழப்பமா? – மனோ விளக்கம்!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் வயது மூப்பின் காரணமாகப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுயமாக விலகியுள்ளார் என்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைபேறு மற்றும் வளர்ச்சிக்கு கணிசமாகப் பங்களித்துள்ள சாப்டரின் இடை விலகலை நாம் கனத்த இதயத்துடன் புரிந்துகொள்கின்றோம்” என்றும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

கூட்டணியின் அரசியல் குழு விரைவில் கூடி, கூட்டணி யாப்புக்கு இணங்க புதிய பொதுச்செயலாளரைத் தெரிவு செய்யும் என்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி இரண்டாகப் பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது என்று இன்று காலை முதல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதன் ஓர் அங்கமாக கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சந்திரா சாப்டர் விலகுகின்றார் என்றும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைப்பீடத்தின் தன்னிச்சையான செயற்பாடு காரணமாகவே பொதுச்செயலாளர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்தநிலையிலேயே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், கூட்டணியின் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் வயது மூப்பின் காரணமாகப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுயமாக விலகியுள்ளார் என்று இன்றிரவு ஊடகங்களிடம் அறிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *