குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்குவதை ஏற்க முடியாது-விக்னேஸ்வரன் கருத்து!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொலிசாரால் வழங்கப்படுகின்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதை ஏற்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றையதினம் திங்கட்கிழமை தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களை மெய்நிகர் வழியாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 பயங்கரவாத தடைச் சட்டம் அரசியல் கைதிகள் விடயத்தில் பாதகமான ஒரு சட்டமாக காணப்படுகின்ற நிலையில் அதனை நீக்க வேண்டும் என்பது அனேகமானவர்களின் நிலைப்பாடு.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுபவரை பொலிசாரால் நீதிமன்றத்திற்கு வழங்கப்படுகின்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்புகள் வழங்கப்படுகிறது.

நான் நீதியரசர் ஆக இருந்தபோது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்க முடியாது என தீர்ப்பு வழங்கினேன்.

ஒருவர் தான் செய்தது குற்றம் என குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினாலும் அக் குற்றத்தை அவர்ம செய்தாரா என்பது தொடர்பில் நீதிமன்றம் ஆராயும் கடப்பாடு உள்ளது. 

பயங்கரவாத தடை சட்டத்தின் ஏற்பாடுகள் அதன் கீழ் கைது செய்யப்படுபவரை நீண்ட காலமாக தொடர்ச்சியாக தடுத்து வைத்து விசாரிப்பதற்கு இடமளிக்கிறது. 

 சிறைகளில் உள்ள தமிழ் அரசிகள் கைதிகள் அனேகமானவர்கள் குற்றவாப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குகள் இடம் பெற்று வரும் நிலையில் வழக்குகள் நிறைவும் சந்தர்ப்பங்களில் புதிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை வைத்து அவர்களை  தொடர்ந்து தடுத்து வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறியப்படுகிறது.

ஆகவே பயங்கரவாத தடை சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருப்பினும் அதனை வியாக்கியானம் செய்ய நீதிபதிகளுக்கு உரித்து உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *