
உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நேற்றையதினம் நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பல்வேறு இடங்களில் கதைக்கப்படுகின்றன. குறித்த காலத்தினுள் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லையா? என்பதை உறுதியாக கூறமுடியுமா? அவ்வாறு இல்லையெனில் அரசாங்கம் தேர்தலுக்கு பயப்படுகின்றதென்றே கருதுகின்றோம் என சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிறசெய்திகள்