சிறிய ஆறுகள் மற்றும் கங்கைகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் வெளியானது!

அத்தனகல்ல ஓயா, களனி கங்கை, களுகங்கை, கின் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக விழிப்புடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மழையினால் முகத்துவாரங்களின் எல்லைப் பிரதேசங்கள் பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் அதிகரித்த மழை காரணமாக சிறிய ஆறுகள் மற்றும் கங்கைகளுக்கு நீர் செல்லும் கால்வாய்களின் நீர் மட்டம் ஒரே தடவையில் அதிகரிக்கலாம்.

இதனால் இப்பிரதேச மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *