தீவகங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு என பேசப்படும் நிலையில் இந்திய துணைத்தூதுவர் நெடுந்தீவு விஜயம்!

யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

அதன் போது, கல்வி, பொது உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து நெடுந்தீவு பிரதேச செயலர் மற்றும் அரச அதிகாரிகளுடன் சிவில் சமூக உறுப்பினர்களுடன் இந்திய துணைத் தூதுவர் கலந்துரையாடினார்.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர், இந்திய புலமைப்பரிசில் பற்றி விளக்கமளித்ததோடு அங்கு மாணவர்களுக்கு பணப்பரிசுகளையும் வழங்கிவைத்தார்.

தீவகப்பகுதிகளில் சீன நாட்டினுடைய ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசப்படும் நிலையில் இந்தியத் துணைத்தூதரின் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *