பாரிய நிதி மோசடி – இன்று நீதிமன்றில் முன்னிலையாகும் திலினி – இசுறு!

பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரது காதலன் என்று கூறப்படும் இசுறு பண்டார ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இசுறு பண்டார நேற்று கோட்டை மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் முற்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி அவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, திலினி பிரியமாலிக்கு எதிராக நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *