காணாமல் போன கடற்படை படகு மீட்பு : இந்திக டிடி சில்வா தகவல்!

சந்தேகத்திற்கிடமான படகுகள் தொடர்பில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு, சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தொடர்பை இழந்த கடற்படைப் படகு நேற்றை தினம் மீண்டும் கடற்படையுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டிடி சில்வா தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி தெற்கு கடற்பகுதிக்கு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற குறித்த படகுடனான தொடர்புகள், செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் இழக்கப்பட்டன.

எவ்வித தொடர்பினையும் ஏற்படுத்த முடியாமையினால், கடற்படையின் ஏனைய கண்காணிப்பு கப்பல்கள் குறித்த படகிளைத் தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

அது மாத்திரமின்றி காணாமல் போன படகை கண்டுபிடிப்பதற்கு பிராந்திய நாடுகளிடமும் இலங்கை கடற்படை உதவியைக் கோரியிருந்தது.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் இலங்கைக்கு தென்கிழக்கில் படகு கண்டுபிடிக்கப்பட்டு, தேடுதலுக்காக நிறுத்தப்பட்ட கப்பல் மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *