உந்துருளி திருட்டு சம்பவம் தொடர்பாக 13 வயது சிறுமி கைது!

மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுமியை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுமியை காலி கிதுலம்பிட்டிய சிறுவர் தடுப்பு நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு காலி நீதவான் லக்மினி விதானகமகே நேற்று உத்தரவிட்டார்.

இதன்படி குறித்த சிறுமி அடுத்த வருடம் முதலாம் திகதி வரை அங்கு தடுத்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி யக்கலமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய குற்றச்சாட்டில் குறித்த சிறுமியும் மற்றுமொரு இளைஞனும் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் தப்பியோடிவிட்டார்.

பிரதான சந்தேக நபர் சிறுமியின் தாயுடன் தொடர்பில் இருந்தமை பின்னர் தெரியவந்தது. பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *