கொள்ளுப்பிட்டி சீ எவென்யூவில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் சடலம் சுமார் 40 முதல் 50 வயதுடைய ஆண் ஒருவருடையது எனவும், 5 அடி 6 அங்குல உயரம் கொண்டதாகவும் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறசெய்திகள்