மாமாவின் மரணச்சடங்கிள் பங்குபெற்ற மருமகன் மீது விழுந்த மரக்கிளை : சம்பவ இடத்தில் பலியான சோகம்!

மாமாவின் மரணச்சடங்கிள் பங்குபெற்ற மருமகன் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில் மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளார்.

இச்சம்பவமானது கம்பளை – அட்டபாகை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியையுடைய (ரட்னசாமி) என தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் மாமாவின் இறுதிக்கிரிகைகள் இன்றையதினம் இடம்பெற்ற நிலையில் இன்று அங்கு வந்த மமகன் மீதும் மரம் முறிந் விழுந்து அவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவிரடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன.

எனவே, அவற்றை அகற்றி தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *