மகாபொல உதவித்தொகையை அதிகரிக்க தீர்மானம் – சுரேன் ராகவன்

மகாபொல உதவித்தொகையை அதிகரிக்க உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் மஹாபொல நம்பிக்கை நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மெரிட் மாதாந்த உதவித்தொகை 5500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

மஹாபொலவில் சராசரி மாதாந்த உதவித்தொகை 5000 என உயர்கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கல்வி உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *