மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய தமிழ் ஊடகவியாளர்கள் – பிள்ளையான் எம்.பி பகீர் அறிவிப்பு

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிக்கையில்:

மட்டக்களப்பில் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் ,அரச அதிகாரிகளின் அரவணைப்பில்,பல தனியார் முதலாளிமாருக்கு விற்கப்பட்டுள்ளது.மக்கள் இருப்பதற்கு காணிகள் இல்லாத நிலையில் ,இவ்வாறான ஒரு சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.இது பற்றிய சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால் தமிழ் ஊடகங்கள்,இது பற்றி எந்த செய்தியையும் வெளியிடவில்லை.

இது பற்றி நான் ஆராய்ந்த போது , அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.பல ஆயிரம் காணிகள் ,தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட நிலையில்,மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கும் தலா 10 பேச் காணி இதில் வழங்கப்பட்டுள்ளது.இதனால் அவர்கள் செய்தியை வெளியிடவில்லை..ஆகவே இந்த விடயம் கண்டிக்கத்தக்கது.மக்களைச் சேர வேண்டிய பல ஆயிரம் ஏக்கர் காணிகள் இப்போது,பணம் படைத்த முதலாளிமாருக்கு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *