விடுதலைப் புலிகள் மீதான தடை இந்தியாவில் நீக்கம் ?

விடுதலைப் புலிகளின் ஜனநாயக வழிமுறைகளை ஏற்று அவர்கள் மீதான தடை இந்தியாவினால் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன்வைத்துள்ளதாக ஜனநாயக போராளிக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

தமிழர் சமூக நல அறக்கட்டளை ,மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுதுளி என்ற அறக்கட்டளையும் இணைந்து இந்தியாவில் சிலியில் மாநாடு ஒன்றை நடாத்தி இருந்தனர்.குறித்த மாநாட்டில் நாம் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்துள்ளோம்.

விரைவாக மாகண சபை தேர்தலை நடத்த வேண்டும். தொல்லியல் துறை என்ற போர்வையில் தமிழர்களது நிலங்கள் தொடர்ச்சியாக அபகரிக்கப்படுகிறது. இந்து ஆலயங்கள் தொல்லியல் துறை என்னும் போர்வையில் தெடர்ச்சியாக பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருகிறது உள்ளிட்ட கோரிக்கைளை நாம் முன்வைத்துள்ளோம்.

விடுதலைப் புலிகளின் ஜனநாயக வளிமுறைகளை ஏற்று அவர்கள் மீதான தடை இந்தியாவினால் நீக்கப்பட வேண்டும்.தமிழர்களுக்கு ஜனநாயகமான சமஸ்டி முறையிலான ஒரு தீர்வு எட்டப்படும் வரை 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை நாம் முன்வைத்துள்ளோம்.

மேலும் மக்களை தெளிவற்றவர்களாக மாற்றும் ஒரு அரசியல் முறையே இங்கு காணப்படுகின்றது.தமிழர்களுடைய அரசியல் பலம் 2020 ம் ஆண்டு தேர்தலுடன் துண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது. எல்லா தமிழர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய நிலையில் உள்ளோம். கட்சிகள் கொள்கைகள் கோட்பாடுகளைத் தாண்டி நிச்சயமக இந்த கட்டத்தில் நாம் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *