ஹேரோயின் போதைபொருளுடன் யாழில் இளைஞன் கைது!

20 மில்லி கிராம் ஹேரோயின் போதைபொருளினை உடைமையில் வைத்திருந்த கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நண்பர்களிடமிருந்தே தனக்கு போதை பொருள் கிடைப்பதாகவும் அதேபோல் தனது கிராமத்திலும் இலகுவாக போதைப் பொருளை பெற்றுக்கொள்ள முடிவதாகவும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக போதைப் பொருள் தான் பாவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின் நாளைய தினம் நீதி மன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *