யாழில் தாயுடன் தவறான உறவில் இருந்த நபர் : மகளையும் சீரழித்ததாக அயலவர்கள் பொலிசில் புகார்!

யாழில் குடும்ப பெண் ஒருவருடன் தவறான தொடர்பினை பேணிவந்த நபர் அப்பெண்ணின் 13 வயது மகளையும் துஷ்பிரயோகத்ததுக்கு உட்படுத்தி வந்துள்ளதாக பொலிஸாரிடம் அயலவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் 41 வயதான ஒருவர் குடும்ப பெண் ஒருவரிடம் தவறாக பலகிவந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணின் 13 வயது சிறுமியை அவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார் என்பது தெரிந்ததே.

இது தொடர்பில் அயலவர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, படுகாயமடைந்த சிறுமியை போலீசார் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *