உரிய தினத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்துங்கள் – எதிர்க்கட்சி

உரிய தினத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கடந்த 20 ஆம் திகதி முதல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு எவ்வித நகர்வுகளையும் முன்னெடுக்கவில்லை.

ஆனால் தற்போது உள்ளுராட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை 8 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக குறைப்பதற்கு அறிவிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை உரிய திகதியில் நடத்தாமல் ஒத்திவைப்பதே இதன்நோக்கமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

அத்துடன் எந்வொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் நிலையில் உள்ளதாக ஐரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *