நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள்!

கொழும்பு, ராகம மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.

கடந்த ஆறு மாதங்களில் பேராதனை போதனா வைத்தியசாலையில் ஐந்து கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்லீரல் சத்திரசிகிச்சைக்கு விசேட உபகரணங்கள் தேவைப்படுவதாகவும், பேராதனை வைத்தியசாலையில் தேவையான சகல உபகரணங்களும் நிபுணத்துவ வைத்தியர்கள் குழுவும் உள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

இந்த கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைகளை வெளிநாட்டில் செய்தால் சுமார் 30 அல்லது 40 மில்லியன் ரூபா செலவாகும் எனவும், இந்த சத்திரசிகிச்சைகளை இந்நாட்டில் செய்தாலும், இதற்காக அரசாங்கம் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *