<!–
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தலைமையில் இன்று ( புதன்கிழமை) நடைபெற்றது.
ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதுடன் முதலாவது ஈகை சுடரினை சிரேஷ்ட ஊடகவியராளர் நவரத்தினம் கபில்நாத் அவர்கள் ஏற்றிவைத்திருந்ததுடன் நினைவுரையினையும் வழங்கியிருந்தார்
தொடர்ந்து ஊடகவியலாளர்கள் நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலியையும் விளக்கேற்றியும் அஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.