காவல் துறை அதிகாரிகள் என கூறி மாணவர்களிடம் கொள்ளை

பாடசாலை மாணவர்களிடம் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடும் குழுவொன்று கண்டி நகரில் இயங்கி வருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கண்டி தலைமையக காவல் நிலையத்தில் பெற்றோர்கள் குழுவொன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, ஏனைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிரமம் ஏற்படும் எனக் கூறி முறைப்பாடு செய்வதை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் காவல்துறை அதிகாரிகள் என்று கூறி மாணவர்களின் புத்தக பைகள் மற்றும் பணப்பையை சோதனை செய்து,அங்குள்ள பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு, யாரிடமும் புகார் செய்யக்கூடாது என மிரட்டிவிட்டு ஓடிவிடுவதாக மாணவர்களின் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *