பேரவை முன்வைத்த குற்றங்கள் தொடர்பில் விளக்கம் வேண்டும்: கபீர் ஹாஷிம்

கொழும்பு,ஒக் 19

மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சரின் உரையில் குறிப்பிடப்படவில்லை என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து விசேட அறிக்கையொன்றை வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டார்.

சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்புவதற்கு உள்ளுர் பொறிமுறையின் ஊடாக செயற்பட அனைத்து அரசியல் கட்சிகளும் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம், பேரவை முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *