
கொழும்பு,ஒக் 19
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட உள்ளார்.
வரி திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் விசேட உரை, ரிவி தெரண மற்றும் அததெரண 24 தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடியாக ஔிபரப்பப்படவுள்ளது.