
இன்றைய சபை அமர்வில் ,ஆரம்ப அறிவித்தல்களை சபைக்கு தெரியப்படுத்திய சபாநாயகர் மஹிந்த யாப அபேவர்தன குறிப்பிடுகையில்:
அரசு வெளியீட்டு பகுதிகளில் ,பல்வேறு விடயங்கள் அச்சிடப் படுகின்றன.அவற்றில் திருத்தச் சட்ட மூலங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் அச்சுப் பதிப்பில் வெளியாகின்றன.ஆகவே அவற்றில் சில சொற்கள் நீக்கப்பட வேண்டும்,மற்றும் சேர்க்கப்பட வேண்டும்.
குறிப்பாக பயங்கரவாத வரையறைக்குள் உள்வாங்கப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்களை முன்னாள் போராளிகள் என்று அழைக்கும் சொற் பதத்தை நீக்க வேண்டும்.அதே போன்று போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிகிச்சைக்கு உட்படுத்தி அவர்களை சமூகத்தில் இணைக்கும் போது புனர்வாழ்வு என்ற சொற் பதம் பயன்படுத்தப்பட வேண்டும் ஆகிய முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
பிறசெய்திகள்