காரைநகரில் மூன்று இந்திய மீனவர்கள் கைது!

<!–

காரைநகரில் மூன்று இந்திய மீனவர்கள் கைது! – Athavan News

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த போதே கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதான மீனவர்களையும் அவர்களின் படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் கடற்படையினர் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *