5 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் வடக்கில் மீட்பு

  • பெருந்தொகையில் மீட்கப்படுவது இதுவே முதன்முறை

  • ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் பேராபத்து

  • 4 சிங்களவர்கள், 2 முஸ்லிம்கள் கைது

உல­கில் மிக ஆபத்­தா­ன­தும் அதி­கூ­டிய விலை உள்­ள­து­மான உயிர்­கொல்லி கொக்­கேய்ன் போதைப்­பொ­ருள் இந்­தி­யா­வி­லி­ருந்து மன்­னார் மாவட்­டத்­தின் சிலா­பத்­துறை ஊடாக கடத்­தி­வ­ரப்­பட்­டுள்­ளது.

அவ்­வாறு கொண்டுவரப்­பட்ட உயிர்­கொல்லி கொக்­கேய்­னில் ஒரு கிலோ 532 கிராம் – சுமார் 5 கோடி ரூபா பெறு­ம­தி­யா­னவை, மன்­னார் பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

மன்­னார் மாவட்ட குற்­றத்­த­டுப்பு பிரி­வுக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லின் பிர­கா­ரம் புத்­த­ளம் நுரைச்­சோலை பகு­திக்கு கடந்த திங்­கட்­கி­ழமை தேடு­தல் நட­வ­டிக்­கைக்­காக சென்­றி­ருந்த மன்­னார் மாவட்ட குற்­றத்­த­டுப்பு பிரி­வி­னர் 1 கிலோ 26 கிராம் உயிர்­கொல்லி கொக்­கேய்ன் போதைப் பொருளை மீட்­ட­னர். அதனை உடை­மை­யில் வைத்­தி­ருந்த சந்­தே­கத்­தில் 5 பேரைக் கைது செய்­த­னர். அவர்­கள் 25, 26, 34, 36 மற்­றும் 53 வய­து­டை­ய­வர்­கள்.

இவர்­க­ளி­டம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக மன்­னார் மாவட்­டத்­தின் நானாட்­டான் பிர­தேச செய­லர் பிரி­வில் 48 வய­து­டைய ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார். அவ­ரது வீட்­டி­லி­ருந்­தும் 506 கிராம் உயிர்­கொல்லி கொக்­கேய்ன் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்­தி­யா­வி­லி­ருந்து மன்­னா­ரின் சிலா­பத்­து­றைக்கு கொண்டு வரப்­பட்ட உயிர்­கொல்லி கொக்­கேய்னே அங்­கி­ருந்து வேறு இடங்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது.

மன்­னார் மாவட்ட மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் துல்­சான் நாகா­வத்­த­வின் பணிப்­பில், உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் பிர­பாத் விதா­னகே, மன்­னார் மாவட்ட குற்­றத்­த­டுப்பு பிரிவு பொறுப்­ப­தி­காரி ரத்­னா­யக தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னர் இத­னைக் கைப்­பற்­றி­யுள்­ள­னர்.

வடக்கு மாகா­ணத்­தில் உயிர்­கொல்லி போதைப் பொருள்­க­ளான கஞ்சா, ஹெரோய்ன், ஐஸ் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் நிலை­யில் அவற்­றை­விட மிக ஆபத்­தான கொக்­கேய்ன் இங்கு மீட்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *