
அரச திணைக்களங்கள் சிலவற்றில் இடம்பெறும் கூட்டங்களுக்கு ,உணவுக்காக அதிக செலவுகள் மேற்கொள்ளப்படுவதாக சபையில் உறுப்பினர்கள் சிலர் இன்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
புவிச் சரிதவியல் மற்றும் பணிப்பாளர் சபை கூட்டங்களுக்கு ஸ்ரார் ஹோட்டலிருந்து,விலை உயர்ந்த உணவுகள் கொண்டுவரப்படுகிறது.நாடு தற்போது உள்ள நிலையில் மக்கள் ஒருவேளை உணவுக்கே கஸ்டப்படுகின்றனர்.இந்த நிலையில் இப்படி ஆடம்பர உணவுகள் அரச கூட்டங்களுக்கு தேவையா.
இது தவிர கணியவள திணைக்களம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை மக்கள் தெரிவிக்கின்றனர்.வீடு கட்டுவதற்கு தேவையான மண்.கல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு அனுமதிக்காக மக்கள் திணைக்களத்துக்கு செல்லும் போது,திணைக்கள அலுவலர்கள் நிறைவான சேவையை வழங்குவதில்லை என சுட்டிக் காட்டியுள்ளனர்.
பிறசெய்திகள்