கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கனகரி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவருக்கு மஞ்சு என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பிரதீப் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பிரதீப், தினமும் மனைவி மஞ்சுவிடம் தகராறு செய்துள்ளார். வழக்கமான சண்டை என்பதால் அப்பகுதி மக்கள் யாரும் குடும்ப சண்டையில் தலையிடவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிரதீப், காலை முதல் மஞ்சுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் ஒரு கட்டத்தை தாண்டியதால் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியின் இரு கை விரல்களையும் வெட்டினார்.
ஒரு கையின் அனைத்து விரல்களும் துண்டிக்கப்பட்டன. இன்னொரு கையின் விரல்கள் உதிர்ந்து போயிருந்தன. இதை தடுக்க முயன்ற தனது இரு மகன்களையும் தாக்கினார்.
இந்த சம்பவம் நடந்தவுடன் பிரதீப் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். மஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மஞ்சுவை மீட்டு சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். தலைமறைவான பிரதீப்பை கோட்டயம் போலீசார் தேடி வருகின்றனர்.