பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய இணைய நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயன்றதன் காரணமாக 2021 ஜூன் மாதம் முதல் 2022 மே முதல் இலங்கையில் இணைய சுதந்திரம் பாதிக்கப்பட்டிருந்தது என நெட்ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
நாட்டில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் காணப்பட்ட மின்சார நெருக்கடி இணையத்தொடர்பை பாதித்தது.
ஏப்பிரல் மாதம் அரசாங்கம் பல சமூக ஊடகங்களை தொடர்பாடல் தளங்களை என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நெட்ரிப்போர்ட், ஏப்பிரல் மே மாதங்களில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய அவசரகால சட்டம் இணையங்களில் காணப்படும் தவறான தகவல்களை களைகின்ற போர்வையில் அதிருப்தியை ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் குறித்த இணைய பதிவுகளிற்காக சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் இணைய பத்திரிகையாளர்கள் உட்பட இணைய பயனாளர்களை கைது செய்தல், தடுத்துவைத்தல், அச்சுறுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இணைய சுதந்திரம் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவான ஹக்கர் குழுக்கள் அரசாங்க இணையத்தளங்களிற்குள் ஊடுருவியதாக அறிவித்தனர்.
ஜனாதிபதியின் இணையத்தளத்தை செயல் இழக்க செய்தனர். அரசாங்கத்தின் சில தரவுதளங்களிற்குள் நுழைந்தனர். ஆனால் இந்த தாக்குதலின் பாதிப்பு தெளிவற்றதாக காணப்படுகின்றது.
பிறசெய்திகள்