பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்சன் ஆகியோரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்

<!–

பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்சன் ஆகியோரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் – Athavan News

பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களான கஜன் சுலக்சன் ஆகியோரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் இன்று (வியாழக்கிழமை) யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது யாழ் பல்கலைக்கழகத்தில் கஜன் மற்றும் சுலக்சனின் உருவப்படத்திற்கு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றபட்டதோடு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

2016 ஒக்டோபர் 20ம் திகதியன்று இரவுநேரத்தில் யாழ்.கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகில்
பொலிசாரின் மிலேச்சத்தனமான துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *