
நாட்டில் உடனடியாக தேர்தல் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பயந்த மாமனும் மருமகனும் என்ற தொனி பொருளில், தேசிய மக்கள் சக்தியினர் ,இலங்கை மன்றத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
மாமாவும், மருமகனும் தேர்தலுக்கு பயந்து ஒதுங்க வேண்டாம். வரலாறு நினைவுக்கு வரவேண்டும். உடன் தேர்தல் நடாத்த வேண்டும்.ரணில் அரசாங்கம் ஏன் தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள் என்று எமக்கு தெரியாது.பொது தேர்தல் கிடையாது. நான்கு வருடங்களுக்கு மேல், மகாண சபை தேர்தல் இல்லை, பிரதேச சபைத் தேர்தல் இல்லை.
ஆகவே குறிப்பிட்ட காலங்களில் தேர்தல் நடாத்தவில்லையென்றால் ரணில் அரசு பாரிய விளைவுகள சந்திக்க நேரிடும். மக்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள் என்றார்.
பிறசெய்திகள்