நீராடச் சென்ற 3 மாணவர்களில் இருவர் உயிரிழப்பு!

அம்பலாங்கொடை பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஊருவத்த பாலத்தை அண்மித்த ஆற்றிற்கு அருகில் உள்ள முகாத்துவாரம் பகுதியில் நீராடச் சென்றபோது மூவரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த, சம்பவம் நேற்று புதன்கிழமை (19) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊருவத்த பாலத்தை அண்மித்த ஆற்றிற்கு அருகில் உள்ள முகாத்துவாரம் பகுதியில் நீராடச் சென்றபோது மூவரும் நீரில் அடித்துச் செல்ப்பட்டுள்ளனர்.

இதன்போது இருவர் பிரேத வாசிகளால் மீட்கப்பட்டு பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 17 வயதுடைய தல்க ஸ்கொட, அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவராவர்.

இந்நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவரை தேடும் பணிகள்தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் காணமல் போன மற்றைய மாணவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது உயிரிழந்தவர் 14 வயதுடைய படபெந்திமுல்ல, அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவர்.

உயிரிழந்தவரின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *