யாழில் சமையலறையில் சாராயம் காய்ச்சியவர் கைது

கோப்பாய் செல்வபுரத்தில் சமையலறையில் வடி சாராயம் வடித்தவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்து 15 லீற்றர் வடி சாராயமும் மீட்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பிரதேசத்தில் வீட்டின் உள்ளே சமையல் அறையில் வடிசாராயம் வடித்துக்கொண்டு இருந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தெய்வனாயகம் மேனன் தலைமையிலான யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ம் வடிசாராயம் வடிக்க பயன்படுத்திய உபகர்ணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *