உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது !

உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று (20.10) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பொலிஸ் உத்தியோக
த்தர்களினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்க
ப்பட்டது. சிவில் உடையில் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

வீட்டு சமையலறையில் மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது 15 லீற்றர் சட்டவிரோத கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கோப்பாய் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.இது தொடர்பாக மேலதிக தகவலை கோப்பாய் பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்துவருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *