அதிகாரிகளின் அலட்சியப் போக்கு: மக்கள் அவதி!

தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பிரதான வீதிகளில் நீர் வழிந்தோடக்கூடிய முறையான வடிகாண் அமைப்புகள் அமைக்கப்படாமையின் காரணமாக வாகனங்கள் மாத்திரமன்று பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதை காணக்கூடியதாக உள்ளது. 

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் கொட்டக்கலை மற்றும் அட்டன் நகரங்களில் இதனை காணக்கூடியதாக உள்ளது.

தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக வீதி எங்கும் நீர் வழிந்தோடி செல்வதனால் பாதசாரிகள் குறித்த வீதியில் பயணிப்பதை பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

எனவே இவ்விடயம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய நிறுவனங்களின் பிரதானிகள் உரிய நடவடிக்கைகளை துரிதக் கதியில் முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வேண்டுகோள் விடுகின்றனர்.

அது மாத்திரமல்ல அட்டன் நகரில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் பாரிய குறிகள் காணப்படுவதால் அங்கும் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பயணிகள் மட்டுமல்லாது வாகனங்களும் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன .

கடந்த பல மாத காலமாகவே குறித்த பிரதேசத்தில் காணப்படும் கூலிகளை மூடுவதற்கு அல்லது அங்குள்ள வீதிகளை செக் பண்ணிடும் பணிகளை முன்னெடுப்பதற்கோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மக்களுக்கான பொது சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பொதுமக்களை பல்வேறு அசோகரிங்களுக்கு உட்படுத்தாத வகையில் உரிய நடவடிக்கைகளை துரித கதியில் எடுக்க வேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *