கண்ணபுரம் பகுதியில் புகுந்த காட்டு யானையால் குழப்பம்!

மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் இன்றைய தினம் (20-10-2022) காட்டு யானை புகுந்துள்ளது.

இவ்வாறு புகுந்த யானைகளால் ஆலயத்தின் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 10க்கும் மேற்பட்ட வீடுக்கள், பயன்தரு மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆலய திருப்பணிவேலைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தின் கதவு மற்றும் தென்னை மரங்கள் மின் இனைப்பு பெட்டி ஆகியவற்றினை முற்றாக உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் குறித்த பகுதியில் பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் அதிகாரிகள் யானையின் அச்சுறுத்தலுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் கிராமங்களை விட்டு வெளியேறி நகர்புறங்களுக்கு போகவேண்டிய நிலைமை ஏற்படும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *