
தன்னிறைவுப் பொருளாதாரம் ஈட்டும் எழுது பூர்வீக நீலாங்களை விடுத்து நாம் மீள்குடியேறவும் விவசாயம் செய்யவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல யாழ்.மாவட்டச் செயலர் ஆவன செய்ய வேண்டும் என பலாலி கிழக்கு அபிவிருத்திச் சங்கத்தால்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள
அறிக்கையில் உள்ளதாவது: இன்று நாடு எதிர்கொண்டுள்ள பொருளா தார நெருக்கடி நிலையை உள்ளூர் உற் பத்திகள், விவசாயம் ஆகிய தன்னிறைவுப் பொருளாதாரம் மூலமே கட்டியெழுப்ப முடி யும். 30 வருட காலமாகப் பலாலி மக்களது வாழ்விடங்கள் அரசாங்கத்தால் விடுவிக் கப்படாது இராணுவத்தினர் வசமுள்ளன.
பலாலிப் பகுதியில் பழங்கள், நெல், குரக் கன், மரவள்ளி, எள்ளு, உழுந்து, பயறு, வெங்காயம், புகையிலை போன்ற பயிர்ச் செய்கைக்கு ஏற்ற மண்வளம் உள்ளமை யாவரும் அறிந்ததே. ஆனால், தன்னி றைவுப் பொருளாதாரம் ஈட்டும் எம் மண் இன்று இராணுவத்தினர் வசம் தரிசு நிலங்களாகவும் பற்றைக்காடுகளாகவும் எதுவித தேவையுமின்றி காணப்படுகின்றன.
ஆகவே, இந்த விடயத்தை ஜனாதிபதி யின் கவனத்துக்குக் கொண்டுசென்று எம் மண்ணை மீட்டு எம்மை மீள்குடியேற்ற சம் பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றுள்ளது.
பிறசெய்திகள்