அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியாகவில்லை.
22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நேற்றையை நாடாளுமன்ற விவாதத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
எனினும், இன்றைய வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு இன்னமும் தெரியவரவில்லை.
இதேவேளை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.
பிறசெய்திகள்