மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகை நிறுத்துமாறு கடற்படையினர் கூறியுள்ளனர்.

எனினும் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில், படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்துள்ளார்.

படுகாயமடைந்த மீனவரை கடற்படையினர் மீட்டு ராமநாதபுரம் அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *