உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – ரமேஷ்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இலங்கையில் பீங்கான், கண்ணாடி மற்றும் சுகாதாரப் பொருட்கள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் வருடாந்த ஏற்றுமதி வருமானம் 10 முதல் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே எதிர்காலத்தில் இறக்குமதியை குறைத்து உள்ளூர் இறக்குமதி மாற்று உற்பத்திகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கைத்தொழில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *