நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்படம் இயக்கும் எஸ்.ஜே.சூர்யா!

தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை அள்ளிக்கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படமொன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கில்லர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி அதில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் தொடர்பான மேலதிக தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இதுகுறித்த உத்தியோகபூர்வ முழுமையாக தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ்.ஜே.சூர்யா, தற்போது பொம்மை, மார்க் ஆண்டனி மற்றும் ஆர்சி-15 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *