ஆட்டோ மீது டிப்பர் மோதி கோர விபத்து! தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே பலி !

முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

42 வயதுடைய தாயும் அவரது 18 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்து பொல்கவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *