நிலக்கரி ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு!

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரும் என எதிர்பார்ப்பதாக லங்கா நிலக்கரி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

அதன்படி, சரக்குகளில் இருந்து கையிருப்பு மின் உற்பத்திக்காக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படும்.

ஒகஸ்ட் மாதம் இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில் தற்போது உள்ள நிலக்கரி கையிருப்பு 2022 அக்டோபர் இறுதி வரை மாத்திரமே போதுமானது என குறிப்பிடப்பிட்டிருந்தது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒகஸ்ட் 25 ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *