மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டம்

மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே தெரிவித்தார்.

ரஷ்ய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இலங்கை தூதரகம் ஏற்கனவே தொடர்ச்சியான விளம்பர பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

அதன்படி, மாஸ்கோவில் உள்ள இலங்கை தூதுக்குழு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உட்பட முக்கிய ரஷ்ய நகரங்களில் பல விளம்பர பிரசாரங்களை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் இலங்கைக்கான சேவைகளை நான்கு மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தியிருந்தது.

அதன்பின்னர் கொழும்பு மற்றும் மொஸ்கோவிற்கு இடையில் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *